வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🍑 *வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🌻சாத்தான் ஒருமுறை தன் தொழிலை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தான்.

🌻அவன் பயன்படுத்தி வந்த கருவிகளைச் சந்தையில் விற்பனைக்கு வைத்தான்.

🌻 *கோபம், காமம், அகங்காரம், பொறாமை, பகை உணர்வு, பேராசை, வீண் ஜம்பம் என எத்தனையோ கருவிகள் கடை பரப்பப்பட்டன.

🌻ஆனால் ஒரே ஒரு பை மட்டும் பிரிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்தனர் மக்கள்
“அது என்ன?” என்று கேட்டனர்.

🌻“இதனுள் இருப்பவை என்னிடம் இருப்பதிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கருவிகள். ஒரு வேலை மறுபடி தொழிலுக்குத் திரும்பலாம் என்று முடிவு செய்தால், எதற்கும் இருக்கட்டுமே என்று இவற்றை மட்டும் வைத்திருக்கிறேன்” என்றான் சாத்தான்.

🌻“எங்கே? திறந்து காட்டு”
“இவை வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை. ஒருபோதும் தோற்றதே இல்லை” என்றபடி சாத்தான் அந்தப் பையைத் திறந்து காட்டினான்.

🌻அதனுள் இருந்த கருவிகள் என்ன தெரியுமா?
சலிப்பு, உற்சாகமின்மை, விரக்தி இந்த மூன்றும்தான்.

🌻சாத்தானின் கருவிகளை வாங்கி வந்திருப்பவர்களில் சிலரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம்.

🌻ஏன், சில கருவிகளை நீங்களே கூட வாங்கியிருக்கலாம்.
இலவசமாகக் கிடைத்திருந்தால்கூட வேண்டாம்.
அவற்றை விட்டெறியுங்கள்.

🌻உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்றுவிடாது. விரலைச் சுற்றிவரும் எங்கே வழி இருக்கிறது என்று தேடும்.

🌻 எத்தனைத் தடைகள் போட்டாலும் எப்படியாவது தன் பயணத்தைத் தொடரும். செத்து விழும் வரை அது உற்சாகத்தை இழப்பதும் இல்லை, நம்பிக்கையை விட்டுக் கொடுப்பதும் இல்லை.

🌻சிறு புல்லைப் பறித்து, அதன் வேர்களைப் பாருங்கள். என்னவொரு உற்சாகத்துடன் பூமியின் உள்ளே ஆழமாகக் கிளைவிட்டு அவை ஊன்றிக்கொண்டு இருக்கின்றன என்று புரியும்.

🌻உலகில் இருக்கும் எந்தவொரு உயிர்ச் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை.

🌻மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும், நம்பிக்கையின்மையும் ஊற்றெடுக்கின்றன.

*வாழ்க்கை என்பதே உற்சாகம் தானே?*

🌻ஒரு முடிவைக் கண்டு அதைத் தோல்வி என எதற்காக எரிச்சல் கொள்ள வேண்டும்?

🌻முதலில் நீங்கள் சந்தித்தது தோல்வி இல்லை. அதை முன் வைத்து உற்சாகமின்றி வேதனையும், எரிச்சலுமாக வெற்றிக்காகப் பாடுபடுகிறீர்களே, அதுதான் உங்களை நீங்கள் தோற்கடித்துக் கொள்ள வழிவகுக்கும்.

*இது நீங்கள் அறியவேண்டிய ரகசியம்.*

நன்றி : " *தன்னம்பிக்கை "*

மனஅழுத்தம்_இன்றி_வாழ_வழி #முறைகள்.!

#மனஅழுத்தம்_இன்றி_வாழ_வழி #முறைகள்.!
=================================

1) * காலையில்  முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

2) * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

3) * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

4) * காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

5) * வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

6) * முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

7) * வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

8) * சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

9) * காஃபி , டீ  அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

10) * சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

11) * இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

12) * தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

13) * செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

14) * சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

15) * செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

16) * உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

17) * எளிமையாக வாழுங்கள்.

18) * உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

19 * நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

20) * வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

21) *ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

22) * எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

23) * குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

24) * தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

25) * பிறருக்காக எதையேனும   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

26) * என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

27) * உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

28) * நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

29) * வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

30) * இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

31) * பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

32) *மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

*பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்*

*பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்*
நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
ஆக,
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை
முறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..
*பகிர்ந்து கொள்ளுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்*

தியாக சிங்கம் - உத்தம சிங்

 தியாக சிங்கம் - உத்தம சிங்

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...
இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.
1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.
2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.
ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.
"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..
ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...
சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.
உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.
நேருவும், காந்தியும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை,
உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.
இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார்.
காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய
காரணமாக அமைந்தது.
அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.
"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.

இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.
ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.
“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,
“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.
உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.
தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வாக சொல்லிக் கொடுங்கள்

*இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள்

*இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !*
சர்க்கரை சர்க்கரை என்று பயந்து பணம் பறிக்கும் கும்பலிடம் மருந்து மாத்திரைகளை தின்று உடல் நலத்தையும், வாழ்நாள் குறைப்பையும் ஏற்காதீர்.
இது ஒரு விழிப்புணர்வு பதிவு.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
வாழ்க மகிழ்வுடன்.
ஓம் சித்த சாமி சித்த சக்தி தாருங்கள்.
இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு
அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி வந்த உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இன்று நாம் அனைவரும் கூடியிருப்பது சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவே.
முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.
நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.
உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டி

மனம் விட்டு சிரியுங்க

*மனம் விட்டு சிரியுங்க*
*வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்*

ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்...
நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்?       அட யாருன்னு சொல்லுமா.
-----😂------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு..SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
---😂--------------------------------
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--😂---------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
--😂---------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
😂-----------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
---😂--------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
---😂-------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
---😂--------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க
--😂---------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
---😂--------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
---😂--------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
😂-----------------------------------
நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.என்
மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
---😂--------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
--😂---------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்
பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து
குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
-😂---------------------------------
Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்
கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.
Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

நிலவு ஏன் வளர்கிறது, பிறகு தேய்கிறது

சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியன் உதிப்பதில்லை. மறைவதுமில்லை. அது இருந்த இடத்தில்தான் இருக்கிறது. பூமிதான் மேற்கில் இருந்து கிழக்காகச் சுற்றி வருகிறது. அதனால்தான் சூரியன் உதிப்பதுபோலவும் மறைவதுபோலவும் தெரிகிறது.

சரி, நிலவு ஏன் வளர்கிறது, பிறகு தேய்கிறது?
பெüர்ணமி நாளன்று நிலவு வெள்ளித் தட்டுபோலப் பிரகாசிக்கிறது. ஆனால் மறுநாளில் இருந்து தினமும் சிறிது சிறிதாகத் தேய்ந்து, அமாவாசையன்று காணாமலே போகிறது. பின்னர் மீண்டும் பிறந்ததுபோல, சிறிது சிறிதாக வளர்ந்து வெள்ளித் தட்டுபோல வானில் மின்னுகிறது. இதை வளர்பிறை, தேய்பிறை என்கிறார்கள்.

உண்மையில் நிலவு தேய்வதும் இல்லை, வளர்வதும் இல்லை. பூமி, சூரியனைச் சுற்றுகிறது. பூமியின் துணைக் கோளான நிலவு, பூமியை வலம் வருகிறது. நிலவு இருபத்தி ஒன்பதரை நாட்களில் பூமியை ஒரு சுற்று வலம் வந்துவிடுகிறது. சூரியனில் இருந்துதான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. அது சூரிய ஒளியை எந்த அளவு பிரதிபலிக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் நிலவு வளர்வதுபோன்றோ தேய்வதுபோன்றோ நமக்குத் தெரிகிறது. பூமியிலிருந்து பார்க்கும்போது, நிலவின் ஒரு பகுதி மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறது. அதன் மறுபுறம் நமக்குத் தெரிவதில்லை.

நிலவு பூமியைச் சுற்றி வருகையில் ஒரு நிலையில் அது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகிறது. அப்போது நிலவின் நமக்குத் தெரியாத பின்பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது; முன்பக்கம் சூரிய ஒளி படுவதில்லை. எனவே, நிலவு நம் தலைக்கு மேலே இருந்தாலும், அது நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அதைத்தான் அமாவாசை கும்மிருட்டு என்கிறோம்.

பிறகு சந்திரன் தொடர்ந்து பூமியை வலம் வர ஆரம்பிக்கும். அப்போது அதன் முன்புறத்தில் எவ்வளவு தொலைவுக்கு சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கிறதோ, அந்தப் பகுதி மட்டும் நமக்குத் தெரிகிறது. அமாவாசை முடிந்து ஒரு வாரத்தில் சந்திரனின் பாதி மேற்பரப்பில் ஒளி படர்ந்திருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிப்பு அதிகரிக்கும்.

பெüர்ணமி நாளன்று பூமிக்கு எதிரேயுள்ள நிலவின் முழுப் பரப்பும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. நிலவு தகதகவென்று மின்னுகிறது. அந்த நாளில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி இருப்பதுதான், நிலவு சூரிய ஒளியை முழுமையாகப் பிரதிபலிப்பதற்குக் காரணம். பிறகு மீண்டும் பழைய சுழற்சிக்கு நிலவு செல்ல, பதினைந்தாவது நாளில் முற்றிலும் மறைந்து அமாவாசை வருகிறது. அடுத்த பதினைந்தாவது நாளில் பெüர்ணமி வருகிறது.

இந்த சுழற்சிதான் நிலவு வளர்வதாகவும் தேய்வதாகவும் தோன்றுவதற்குக் காரணம். பெüர்ணமியன்று சூரியன் மறையும்போது தோன்றும் முழுநிலா, மறுநாள் காலை சூரியன் உதயம் ஆகும்போதுதான் மறையும். அதுவரை நம் கண்களுக்கு விருந்தளித்து மகிழ்விக்கும்